ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கடந்த வருடம் மார்ச் மாதம் துவங்கிய கொரோனா தாக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சுழன்றடித்த நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையும் வீச துவங்கியுள்ளது. அதேசமயம் தற்போது கொரோனா தொற்றை தவிர்க்க தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆமீர்கான், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலுக்கும் கொரோனா பாசிடிவ் என்பது உறுதியாகியுள்ளது. இவர் தான் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால் சில வாரங்களுக்கு முன்னர் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பரேஷ் ராவல். ஆனால் அதையும் மீறி கொரோனா தொற்றால் இவர் பாதிக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தகவலை தானே வெளியிட்டுள்ள பரேஷ் ராவல், கடந்த பத்து நாட்களாக தன்னை சந்தித்து சென்றவர்கள், தங்களை ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.