நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
கடந்த 20 வருட பாலிவுட் சினிமாவை ஆய்வு செய்து பார்த்தால் நடிகர் அமீர்கான், மற்ற இரண்டு கான் நடிகர்களை போல, ஆக்சன் பாதையில் செல்லாமல் நல்ல கதை அம்சம் மற்றும் கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதை பார்க்க முடியும். அந்த வகையில் கடந்த 2007ல் அவர் நடித்த படம் தான் 'தாரே ஜமீன் பர்'. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீர்கானுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. அமீர்கானே இந்த படத்தை இயக்கியும் இருந்தார். ஆஸ்கர் விருது போட்டி வரை இந்த படம் சென்றது.
தற்போது இந்த படம் வெளியாகி 18 வருடங்கள் கழிந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லும் விதமாக 'சிதாரே ஜமீன் பர்' என்கிற திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் இந்தப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் ஜூன் 20ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பேஸ்கட்பால் கோச்சாக அமீர்கான் நடிக்கிறார் என்பதை போஸ்டர் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.