கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் |
ராமாயணக் கதையை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் வெளிவந்த படம் 'ஆதிபுருஷ்'. அப்படம் சுமார் 500 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு 'மோஷன் கேப்சரிங்' முறையில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். படத்தின் உருவாக்கம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. அதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பையோ, வசூலையோ பெறவில்லை.
இந்நிலையில் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த 'சைப் அலிகான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் தைமூர் படத்தைப் பார்த்த போது உடனே என்னைப் பார்த்தான். நான் என்னை மன்னித்துவிடு என்றேன், அதற்கு பரவாயில்லை என்று பதிலளித்தான் எனக் கூறியிருந்தார்.
தான் நடித்த ஒரு படத்தை இப்போது அப்படிக் குறிப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் என்ன என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சைப் அலிகானை கடுமையாகக் கிண்டலடித்தனர்.
சர்ச்சை எழுந்ததை அடுத்து சைப் அலிகான், “படத்தில் நான் வில்லனாக நடித்ததுதான் எனது மகனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதற்காகத்தான் நான் அவனிடம் மன்னிப்பு கேட்டேன். அடுத்த முறை ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சொன்னான். நான் நடித்த எல்லா படத்தையுமே விரும்புகிறேன், இந்த 'ஆதிபுருஷ்' உட்பட…,” என விளக்கமளித்துள்ளார்.