இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தர்பார் படத்திற்கு பின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர மீண்டும் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகனாக சல்மான்கான் நடிக்கிறார். முதன்முறையாக இவர்கள் இணைந்து பணியாற்றும் படம் இதுவாகும்.
சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கரீனா கபூர் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று ஜூன் 18ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் சல்மான் மற்றும் தயாரிப்பாளர் சாஜித் உடன் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் முருகதாஸ்.