ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தர்பார் படத்திற்கு பின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர மீண்டும் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகனாக சல்மான்கான் நடிக்கிறார். முதன்முறையாக இவர்கள் இணைந்து பணியாற்றும் படம் இதுவாகும்.
சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கரீனா கபூர் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று ஜூன் 18ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் சல்மான் மற்றும் தயாரிப்பாளர் சாஜித் உடன் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் முருகதாஸ்.