பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 |
ஹிந்தியில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‛சிக்கந்தர்'. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அந்த படத்தை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‛மதராஸி' என்ற படத்தை இயக்கி இருக்கிறார் முருகதாஸ். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சிக்கந்தர் படத்தின் தோல்விக்கு சல்மான்கானே காரணம் என்பது போல் கூறியுள்ளார்.
அதாவது, ‛‛சல்மான்கானுடன் பணிபுரிவது அத்தனை எளிதான காரியம் அல்ல. பெரும்பாலும் அவர் படப்பிடிப்பின் போது தாமதமாகதான் வருவார். பகலில் திட்டமிட்டபடி படமாக்க முடியாமல் செயற்கை விளக்குகள் மூலம்தான் அவரது காட்சிகளை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவற்றை எல்லாம் சிஜி மூலம் சரி செய்தோம். இதற்கெல்லாம் மேலாக இந்த படத்தின் கடைசி நேரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இதுதான் அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது'' என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ்.