ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
பாலிவுட் நடிகை லைலா கான். 'வாபா: தி டெட்லி லவ் ஸ்டோரி' உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தார். 'மேக்-அப்' என்கிற கன்னட படத்திலும் நடித்தார். ஒரு சில படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர், தாய் செலினா, சகோதரிகள் ஆஸ்மினா, சாரா, சகோதரன் இம்ரான் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரி ரேஷ்மா ஆகியோர் மாயமானதாக புகார் வந்தது. போலீசார் தேடி வந்தனர்.
இந்த சூழலில், அதே ஆண்டு ஜூலையில் இகத்புரியில் லைலாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டுத் தோட்டத்தில் அழுகிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டது. அவரது தாய் செலினா மற்றும் உடன்பிறந்தவர்கள் என மேலும் ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து நடத்திய விசாரணையில், செலினாவின் மூன்றாவது கணவரும், லைலாவின் வளர்ப்பு தந்தையுமான பர்வேஸ் தக்,இந்த கொலைகளை செய்தது அம்பலமானது.
சொத்து தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் செலினா, லைலா என இருவரையும் கொலை செய்த பர்வேஸ் தக், பின்னர் மேலும் நான்கு பேரை கொலை செய்ததும் தெரிய வந்தது. ஜம்மு - காஷ்மீரில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, இது தொடர்பான விசாரணை கடந்த 13 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக 40 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், பர்வேஸ் தக் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன.
இதையடுத்து, அவர் குற்றவாளி என கடந்த 9ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பர்வேசுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.