ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகும் நிலையில் கடந்த பிப்ரவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் தீபிகா. தற்போது இருவரும் தங்களது குழந்தையின் வருகையை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருப்பதாக பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமண புகைப்படங்களை திடீரென்று நீக்கியுள்ளார். இதனால் பாலிவுட் மீடியாக்களில் ரன்வீர் சிங்கும், தீபிகாவும் பிரியப் போவதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியானது .
அதையடுத்து ரன்வீர் சிங் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், என்னுடைய இன்ஸ்டா பக்கத்திலிருந்து திருமண புகைப்படங்களை நீக்கவில்லை. அதை ஆர்கேவ் செய்து வைத்திருக்கிறேன் என்று உடனடியாக ஒரு தகவல் வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். மேலும் தற்போது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் சிங்கம் அகைன் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.