பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ் திரையுலகில் நுழைந்து சில படங்களில் நடித்தார். தொடர்ந்து தனது படங்கள் குறித்த செய்திகளில் மட்டுமல்லாது அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை அவ்வப்போது கூறி அரசியல் அரங்கிலும் கூட பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். தேசிய கட்சியான பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் மரியாதை கொண்ட கங்கனா தற்போது நடைபெற்று வரும் 2024க்கான லோக்சபா தேர்தலில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் இவர் தனது தொகுதி முழுக்க பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவரது பிரச்சாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் அவர் பேசும் பேச்சு சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் டில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு நான் பிரச்சாரத்திற்கு சென்றபோது எனக்கு கிடைத்த மரியாதையும் வரவேற்பையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. திரையுலகில் இருந்து அமிதாப் பச்சனுக்கு பிறகு இப்படி ஒரு அன்பும் மரியாதையும் இந்த மக்களிடம் இன்னொருவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது எனக்கு மட்டும்தான் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என்று பெருமையுடன் கூறியுள்ளார் கங்கனா.