4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? |
பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ் திரையுலகில் நுழைந்து சில படங்களில் நடித்தார். தொடர்ந்து தனது படங்கள் குறித்த செய்திகளில் மட்டுமல்லாது அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை அவ்வப்போது கூறி அரசியல் அரங்கிலும் கூட பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். தேசிய கட்சியான பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் மரியாதை கொண்ட கங்கனா தற்போது நடைபெற்று வரும் 2024க்கான லோக்சபா தேர்தலில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் இவர் தனது தொகுதி முழுக்க பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவரது பிரச்சாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் அவர் பேசும் பேச்சு சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் டில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு நான் பிரச்சாரத்திற்கு சென்றபோது எனக்கு கிடைத்த மரியாதையும் வரவேற்பையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. திரையுலகில் இருந்து அமிதாப் பச்சனுக்கு பிறகு இப்படி ஒரு அன்பும் மரியாதையும் இந்த மக்களிடம் இன்னொருவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது எனக்கு மட்டும்தான் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என்று பெருமையுடன் கூறியுள்ளார் கங்கனா.