ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் |
தமிழில் ‛தலைவி, சந்திரமுகி- 2' போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவர் தற்போது பா.ஜ.,வின் லோக்சபா எம்.பி.,யாகவும் உள்ளார். இந்த நிலையில் கங்கனா அளித்துள்ள ஒரு பேட்டியில், திருமணமான ஆண்களைதான் கங்கனா காதலிப்பார் என்று கூறப்படுகிறதே? என அவரை நோக்கி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஆவேசமாக பதில் கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛திருமண கனவுகளோடு இருந்து வரும் ஒரு பெண் ஏற்கனவே திருமணம் ஆன ஆண்களை காதலித்தால் அது அந்த பெண்ணின் குற்றம், ஆணின் தவறு இல்லை. இப்படித்தான் இந்த சமூகத்தில் எந்த ஒரு சூழலாக இருந்தாலும் பெண்களை மட்டுமே குறை கூறுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் அந்த தவறை செய்த ஆணை குறை சொல்வதை விட, அந்த பெண் மோசமான உடை அணிந்திருக்கிறாள். இரவில் வெளியே செல்கிறாள் என்று பெண்களை டார்க்கெட்டை செய்து மட்டுமே குறை சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தவறான கண்ணோட்டம் இந்த சமூகத்தில் இருந்து வருகிறது. அதனால்தான் பெண்ணாக இருப்பதால் என்னை மட்டுமே இந்த சமூகம் குற்றம் சொல்கிறது. அதில் சம்பந்தப்பட்ட ஆணை குறை சொல்லவில்லை'' என்று ஆவேசமாக ஒரு பதில் கொடுத்திருக்கிறார் கங்கனா ரணாவத்.