மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடனம் ஆடினர். இவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் எத்தனை கோடிகளை கொடுத்தாலும் திருமண விழாக்களில் பாட மாட்டேன் என்று கூறியது போல, நானும் ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறேன். அதன் காரணமாகவே எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் திருமண விழாக்களில் நடனம் ஆடுவதில்லை. பல திருமண விழாக்களில் நடனமாட எனக்கு அழைப்பு வந்த போதும், நான் மறுத்துவிட்டேன். அதோடு விருது நிகழ்ச்சிகளில் கூட நான் நடனம் ஆடுவதில்லை. நல்ல முறையில் பணத்தை உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இதைச் சொல்கிறேன்'' என்கிறார்.