வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடனம் ஆடினர். இவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் எத்தனை கோடிகளை கொடுத்தாலும் திருமண விழாக்களில் பாட மாட்டேன் என்று கூறியது போல, நானும் ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறேன். அதன் காரணமாகவே எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் திருமண விழாக்களில் நடனம் ஆடுவதில்லை. பல திருமண விழாக்களில் நடனமாட எனக்கு அழைப்பு வந்த போதும், நான் மறுத்துவிட்டேன். அதோடு விருது நிகழ்ச்சிகளில் கூட நான் நடனம் ஆடுவதில்லை. நல்ல முறையில் பணத்தை உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இதைச் சொல்கிறேன்'' என்கிறார்.