ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு புகைப்படத்தில் அல்லது வீடியோவில் இருக்கும் ஒருவரது முகத்தை இன்னொரு நபரின் முகத்தின் மேல் பொருத்த முடியும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தான் சோசியல் மீடியாவில் பலரும் போலியான வீடியோக்களை பரப்பி வருகிறார்கள். இப்படித்தான் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஷாரா படேல் என்பவரின் முகத்தில் இணைத்து டீப் பேக் வீடியோ வெளியிட்டிருந்தார்கள்.
இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தற்போது மத்திய அரசும் அதை தடுப்பதற்கு ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இப்படியான நிலையில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைப்பின் டீப் பேக் வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து பலரும் இதுகுறித்து புகார் அளிக்குமாறு கேத்ரினா கைப்பை வலியுறுத்தி வருகிறார்கள்.