வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

பாலிவுட் நடிகை கங்கனா தனது துணிச்சல் மிகுந்த பேச்சால் ஹிந்தி திரையுலகிலும் சரி, மகாராஷ்டிரா அரசியலிலும் சரி மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு அரசியல் ரீதியாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் எம்.பியும் , அரசியல்வாதியுமான சுப்பிரமணிய சுவாமி, கங்கனா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து கிண்டலாக விமர்சித்துள்ளார். அப்படி இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக பதில் கொடுத்துள்ளார் கங்கனா.
இது குறித்து கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், "நான் வெறும் நடிகை மட்டும் அல்ல. ஒரு இயக்குனர், தயாரிப்பாளரும் கூட. அதுமட்டுமல்ல விரைவில் வெளியாக இருக்கும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து உருவாகியுள்ள எமர்ஜென்சி என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளேன். மகாராஷ்டிராவில் தேசியவாதிகள் அரசு அமைய வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மேலும் நான் தக்தே கும்பலை பற்றியும், காலிஸ்தான் அமைப்புகளை பற்றியும் கடுமையாக கண்டித்தேன். தற்போது உள்ள மலிவான அரசியல்வாதிகள் பலர் என்னை டார்கெட் செய்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதற்காகத்தான் எனக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.