ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 1998ல் ஹிந்தியில் வெளியான படம் சத்யா. அதுவரை வில்லன் நடிகராக நடித்து வந்த ஜே.டி சக்கரவர்த்தி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தியன் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ரங்கீலா புகழ் ஊர்மிளா தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஒரு பக்காவான கேங்ஸ்டர் படமாக இது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றது. சொல்லப்போனால் ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை பாலிவுட்டில் இந்த படம் ஏற்படுத்தியது.
இந்த படம் வெளியாகி நேற்றுடன் 25 வருடங்களை தொட்டுள்ளது. இந்த படம் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகி ஊர்மிளா. அதேசமயம் இந்த படம் வெளியாகி 25 வருடங்களாகியும் அவர் இன்னும் ஒரு மனக்குறையுடன் தான் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படம் வெளியான சமயத்தில் தான் மிகவும் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து பிசியாக இருந்து வந்ததாகவும் அந்த சமயத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரத்தில் கிளாமர் இல்லாமல் இந்தப்படத்தில் நடித்திருந்தேன். ஆனால் இதற்காக எனக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல எந்த ஒரு விருதுக்கும் நான் நாமினேட் கூட செய்யப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஊர்மிளா.