என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் |
போலோ சங்கர் படத்தை அடுத்து தற்போது விஸ்வாம்பரா மற்றும் தனது 157வது படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதில் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் அவர் நடித்துள்ள விஸ்வாம்பரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் ஏற்கனவே ஒரு சிறப்பு பாடலுக்கு தமன்னா நடனமாடிய நிலையில், தற்போது இன்னொரு பாடலுக்கு அவருடன் இணைந்து பாலிவுட் நடிகை மவுனி ராய் நடனமாடுகிறார். இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை, இந்த சிறப்பு பாடல் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இப்படத்தை தயாரித்து வரும் யுவி கிரியேஷன்ஸ் அறிவிக்க உள்ளது.