தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர், நிறைய காதலிப்பார் திடீரென எல்லாவற்றையும் ரத்து செய்வார். முதல் நாள் காதலனுடன் படு நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவார். மறுநாள் காதலன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளிப்பார்.
கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பாடகர் மிகா சிங் தனது பிறந்த நாளை பார்ட்டி வைத்து கொண்டாடினார். இந்த விழாவில் ராக்கி சாவந்த் கலந்து கொண்டார். பார்ட்டி உச்சத்தில் இருக்கும் போது பாடகர் மிகா சிங், ராக்கி சாவந்தை இழுத்து பிடித்து ஒரு உம்மா கொடுத்துவிட்டார். இது தொடர்பாக ராக்கி சாவந்த் போலீசில் புகார் செய்தார். புகாரை பதிவு செய்து போலீசார் மிகா சிங் மீது வழக்கு தொடர்ந்தனர். 7 ஆண்டுகளாக மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
பாடகர் மிகா சிங்கும், நடிகை ராக்கி சாவந்தும் நாங்கள் முத்த பிரச்சினையை எங்களுக்குள் பேசி முடித்து சமாதானமாகி விட்டோம். அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.