பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துஹான் சிங். அந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதேசமயம் அதிக அளவிலான தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமாவில் நுழைந்த இந்த எட்டு வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவிட்ட கபீர் துஹான் சிங், நடிகர் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் தற்போது நடித்து வரும் வரலாற்று படமான அஜயன்டே ரெண்டாம் மோஷனம் என்கிற படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகிலும் நுழைந்துள்ளார்.. இந்த நிலையில் விரைவில் திருமண வாழ்க்கையிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் கபீர் துஹான் சிங்
ஆம்.. இவரது திருமணம் வரும் ஜூன் 23ம் தேதி டில்லியில் நடைபெற இருக்கிறது. மணப்பெண் சீமா சஹால் ஹரியானாவை சேர்ந்தவர். பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் பெரியோர்களால் பேசி முடிக்கப்பட்ட திருமணம். அதேசமயம் இந்த திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விதமாக எளிய முறையில் நடைபெற இருக்கிறதாம்.