புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாலிவுட் நடிகர்கள் விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதை போல நடிகைகள் சொகுசு வீடுகளை வாங்குவதில் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தீபிகா படுகோனே இணைந்துள்ளார். மும்பை பாந்த்ரா கடற்கரைக்கு அருகில் உள்ள பிரமாண்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 16வது தளத்தில் உள்ள 4 வீடுகளையும் வாங்கி உள்ளார். இதன் மூலம் 16வது தளம் முழுக்கவே அவரது சொந்தமாகிறது. 4 வீடுகளும் தனித்தனியாக இருந்தாலும் தற்போது எல்லா வீடுகளையும் ஒரே வீடாக அவர் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடுகளின் மொத்த விலை ரூ.119 கோடி என்கிறார்கள்.
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதிகளுக்கு மகாராஷ்டிராவில் மாநிலம் அலிபாக் நகரில் அரண்மனை போன்ற பங்களாக உள்ளது. சினிமாவில் நடிக்க வசதியாக மும்பை பாந்தாரா பகுதியில் லீசுக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இப்போது அந்த பகுதியிலேயே சொந்த வீடு வாங்கி விட்டார். இதுதவிர பாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகாவிற்கு அமெரிக்காவிலும் சொந்த வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. தீபிகா தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க 25 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 15 கோடி வாங்கி வந்த அவர் பதான் படத்திற்கு பிறகு 25 கோடியாக உயர்த்தி விட்டார் என்கிறார்கள்.