மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
புனிதமான கோயில்களுக்குள் இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் பாரம்பரிய உடைகளை தவிர்த்து மேற்கத்திய உடைகளை அணிந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோயில்களுக்குள் மேற்கத்திய உடைகள் அணிந்து வர தடை செய்து கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
கோயிலுக்குள் இளம் பெண்கள் கவர்ச்சியான உடை அணிந்து நிற்கும் படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பதாவது: நான் ஒருமுறை வாடிகனுக்கு ஷார்ட்ஸ் டி-சர்ட் அணிந்து சென்றேன். என்னை வளாகத்துக்குள்கூட அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் ஒட்டலுக்கு சென்று உடைகளை மாற்ற வேண்டி இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களின் உடைகளை அணிந்து இன்று சர்வசாதரணமாக கோயிலுக்கு செல்கிறார்கள். கோயில்களுக்குள் இரவு உடைகளை அணியும் இந்த கோமாளிகள், சோம்பேறிகள், கோயிலுக்குள் மேற்கத்திய உடை அணிந்து வரும் இதுபோன்ற முட்டாள்களுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.