வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

ஹிந்தியில் உருவாகி உள்ள ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த சில தினங்களாகவே கேரளாவையும் தாண்டி நாடெங்கிலும் பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஹிந்து அப்பாவி பெண்களை லவ் ஜிகாத் என்கிற பெயரில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அவர்களை ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் தொழிலாளிகளாக அனுப்பி வைக்கப்படுவதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தை திரையிடக்கூடாது எனக் கூறி சில அமைப்புகளிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் இந்த படத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க மறுத்து விட்டது. அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
கடந்த வெள்ளியன்று போலீசார் பாதுகாப்புடன் இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் இந்த படத்திற்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த படம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதால் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள், குறிப்பாக மகள்களுடன் சென்று இந்த படத்தை பார்ப்பதற்கு வசதியாக வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.