லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
பாகுபலி படம் வெளியான பின்பு ஒரு நேரத்தில் ஒரே ஒரு படம் மட்டுமே செலெக்ட்டிவாக தேர்ந்தெடுத்து நடித்துவந்த நடிகர் பிரபாஸ், அந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து ‛காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது போல தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஆதிபுருஷ், சலார் போன்ற படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இவை தவிர புராஜெக்ட் கே, ராஜா டீலக்ஸ், ஸ்பிரிட் ஆகிய படங்களும் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் தான், ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த், பிரபாஸ் படத்தை இயக்குவதாக கடந்த சில முன்பு மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அந்த படத்தை தயாரிப்பதாக சொல்லப்படும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளருடன் சித்தார்த் ஆனந்த் சந்திப்பும் நிகழ்ந்து ஒரு மிகப்பெரிய தொகை அட்வான்ஸ் ஆக கொடுக்கப்பட்டதாகவும் அப்போது சொல்லப்பட்டது.
இந்த நிலையில் பிரபாஸ் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால், தான் நினைத்தபடி தங்களது படத்தை இயக்குவதற்கு உடனடியாக வசதியான தேதிகள் கிடைக்காது என்பதை உணர்ந்து, இந்த படத்தில் இருந்து தற்போது விலகிக் கொண்டுள்ளாராம் சித்தார்த் ஆனந்த். அதுமட்டுமல்ல இந்த படத்திற்காக தனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அட்வான்ஸ் தொகையையும் தயாரிப்பு நிறுவனத்திடம் திருப்பிக் கொடுத்து விட்டாராம். தற்போது ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷனை வைத்து அவர் இயக்கி வரும் பைட்டர் என்கிற படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது.