பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாராகும் பெரிய பட்ஜெட் படங்களால் சினிமாவுக்கே ஆபத்து என்று பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பலகோடி ரூபாய் செலவில் தயாராகும் படங்களில் கதை, நடிப்பு என எதுவும் இருப்பதில்லை. அவற்றில் 5 பாடல்கள் இருக்கின்றன. அவற்றை நடன இயக்குநர்கள் கவனிக்கின்றனர். சில ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. அவற்றை ஸ்டன்ட் இயக்குநர்கள் கவனிக்கின்றனர். படத்தில் இயக்குநருக்கு என்ன வேலை? நடிகருக்கு என்ன வேலை?. மக்கள் பார்க்க விரும்பாத படங்களுக்கு பல நூறு கோடிக்கு மேல் செலவு செய்கின்றனர். அவற்றில் ஒன்றும் இல்லாததால் அவை தோல்வி அடைகின்றன. நல்ல கலைஞர்களை வைத்து வெறும் 50 கோடியில் இவர்கள் படம் எடுப்பதில்லை.
பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்கள்தான் திரைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணம். கதை, திரைக்கதை, நடிப்பு அனைத்தும் அவற்றில் வெற்றிடங்களாக உள்ளன. இந்த படங்கள் சினிமாத் துறைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஏதோவொரு காரணத்தால் அரிதான ஒரு சில படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் ஆகின்றன. ஆனால், அந்த 3 சதவீத படங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் மீதமிருக்கும் 97 சதவீத படங்களும் தோல்வி அடைகின்றன. இவை அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.