என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
சினிமா பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும்போதும், வெளியூர் பயணங்களை மேற்கொள்ள விமான நிலையம் செல்லும்போதும், ரசிகர்கள் சம்பந்தப்பட்ட பிரபலங்களின் அனுமதியை கேட்காமலேயே அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்று நடிகர் சிவகுமாரின் அனுமதியின்றி அவருடன் செல்பி எடுக்க ஒரு இளைஞர் முயன்றபோது அவரது செல்போனை சிவகுமார் தட்டிவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல நடிகர் மம்முட்டி ஒரு முறை பிரார்த்தனை செய்வதற்காக மசூதிக்குள் நுழைந்தபோது செல்பி எடுக்க முயன்ற இளைஞர்களிடம் இருந்து செல்போனை பறித்து வைத்துக்கொண்டு, தொழுகை முடிந்த பின்னர் அவர்களிடம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பினார். சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞனின் செல்போனை பறித்து தூக்கி இருந்தது சர்ச்சையை கிளப்பியது.
தற்போது லேட்டஸ்டாக விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த நடிகர் ஷாருக்கானுடன் அவரது அனுமதி இன்றி ஒரு இளைஞர் செல்பி எடுக்க முயற்சிப்பதும் நடிகர் ஷாருக்கான் போகிற போக்கில் அந்த இளைஞரின் கையை தட்டி விடும் விதமாக அந்த பக்கம் தள்ளி விடுகின்ற வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வழக்கம்போல சிலர் ஷாருக்கானை விமர்சித்தாலும் பெரும்பாலாக நெட்டிசன்கள் எந்த ஒரு பிரபலமாக இருந்தாலும் அவர்களது அனுமதி இல்லாமல் செல்பி எடுக்க முயற்சிப்பது தவறான விஷயம் என்று ஷாருக்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.