16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான்கான் ஐம்பது வயதை கடந்த பின்னரும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலராகவே வலம் வருகிறார். அதே சமயம் கடந்த 25 வருடங்களில் தன்னுடன் இணைந்து நடித்த பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கவும் இவர் தவறவில்லை. ஆனால் அப்படி இவருடன் கிசுகிசுக்கப்பட்ட அனைத்து கதாநாயகிகளும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது சல்மான்கான் நடிப்பில் வெளியாகி உள்ள ‛கிஸி கா பாய் கிஸி கி ஜான்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சல்மான்கானிடம் அவரது காதல் ராசி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சல்மான்கான், "காதலுக்கும் எனக்கும் ராசியில்லை. என்னை காதலன் (ஜான்) என்று அழைக்க வேண்டியவர் அண்ணா (பாய்) என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்" என வேடிக்கையாக கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் நடிக்க துவங்கிய சமயத்தில் இருந்தே, கடந்த சில மாதங்களாக சல்மான்கானுக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் காதல் என்று மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது சல்மான் கான் இப்படி கூறியுள்ளது பூஜா ஹெக்டேவை மனதில் வைத்து தானா என்று சோஷியல் மீடியாவில் மீண்டும் ஒரு விவாதம் தொடங்கியுள்ளது.