ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான்கான் ஐம்பது வயதை கடந்த பின்னரும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலராகவே வலம் வருகிறார். அதே சமயம் கடந்த 25 வருடங்களில் தன்னுடன் இணைந்து நடித்த பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கவும் இவர் தவறவில்லை. ஆனால் அப்படி இவருடன் கிசுகிசுக்கப்பட்ட அனைத்து கதாநாயகிகளும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது சல்மான்கான் நடிப்பில் வெளியாகி உள்ள ‛கிஸி கா பாய் கிஸி கி ஜான்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சல்மான்கானிடம் அவரது காதல் ராசி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சல்மான்கான், "காதலுக்கும் எனக்கும் ராசியில்லை. என்னை காதலன் (ஜான்) என்று அழைக்க வேண்டியவர் அண்ணா (பாய்) என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்" என வேடிக்கையாக கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் நடிக்க துவங்கிய சமயத்தில் இருந்தே, கடந்த சில மாதங்களாக சல்மான்கானுக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் காதல் என்று மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது சல்மான் கான் இப்படி கூறியுள்ளது பூஜா ஹெக்டேவை மனதில் வைத்து தானா என்று சோஷியல் மீடியாவில் மீண்டும் ஒரு விவாதம் தொடங்கியுள்ளது.