மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பெங்களூரை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மும்பை திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தாக அவரது காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்ணாண்டசும் விசாரணை வளையத்திற்குள் உள்ளார். இநத நிலையில் இலங்கையை சேர்ந்த பெண்ணான ஜாக்குலினுக்கு சிறையில் இருந்தபடியே ஈஸ்டர் வாழ்த்து சொல்லி காதல் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் சுகேஷ்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: என் செல்லக் குழந்தை ஜாக்குலின். குட்டி முயலே... எனது பேபியே... உனக்கு எனது இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள். உனக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று என தெரியும். இந்த பூமியில் உன்னை விடவும் அழகி யாருமே கிடையாது. ஐ லவ் யூ பேபி.
இந்த நேரமும் கடந்து போகும். மீண்டும் நல்ல நாட்கள் வரும். ஒவ்வொரு கணமும் உன்னை மிஸ் செய்கிறேன். ஒவ்வொரு கணமும் நீயும் என்னை மிஸ் செய்வாய் என்று எனக்கு தெரியும். அடுத்த ஆண்டு ஈஸ்டர் தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். என்று எழுதியுள்ளார்.