ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் சர்ச்சைக்கு பெயர்போனவர். அவருக்கு அவ்வப்போது கொலை மிரட்டல்களும் வருவதுண்டு. தற்போது அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சல்மான்கான் மானேஜருக்கு கடந்த 18ம் தேதி இமெயில் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் பிரபல தாதா கோல்டி பிரர், சல்மான்கானுடன் பேச வேண்டும், இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிற தொணியில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் கோல்டி பிரரின் கனடா நாட்டு கூட்டாளியிடமிருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சல்மானின் மானேஜர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலை தொடர்ந்து சல்மான்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.