தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்தியாவில் உருவாகி, ஹிந்தியில் வெளியாகும் படங்கள் அங்குள்ள முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்களை விட அதிக அளவில் வசூலித்து வருகின்றன. அந்தவகையில் கேஜிஎப் 2, பாகுபலி 2 ஆகிய படங்கள் ஹிந்தியில் மிகப்பெரிய வசூலை பெற்றன. குறிப்பாக இதுவரை பாலிவுட்டில் வெளியான படங்களில் பாகுபலி 2 படம் 510 கோடி வசூலித்து முதல் இடத்தை தக்க வைத்திருந்தது.
அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கேஜிஎப் 2 மற்றும் ஆமிர்கானின் தங்கல் ஆகியவை இருந்தன. பாகுபலி 2வின் இந்த சாதனை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் தற்போது இந்தியில் மட்டும் 526 கோடி வசூலித்து பாகுபலி 2 வசூல் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பதான் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் சோசியல் மீடியாவில் கூறும்போது, “எனக்கு இது மிகவும் பெருமையான தருணம்.. இந்த படத்தை உற்சாகப்படுத்திய அனைத்து பார்வையாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.