புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். தற்போது செல்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் நாளை(பிப்., 24) வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் முழுவீச்சில் நடந்தது. இந்த படத்தின் ஒருபகுதியாக ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அக்ஷய். அதாவது மூன்று நிமிடத்தில் 184 செல்பி எடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அக்ஷய் கூறுகையில், ‛‛இந்த தருணம் வரை நான் இதுவரை சாதித்த அனைத்து விஷயங்களிலும், எல்லா இடங்களிலும் என் உடன் இருப்பது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவே காரணம். இது அவர்களுக்கான என் சிறப்பு பரிசு. அனைவருக்கும் நன்றி. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இதை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.