'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். சமீபத்தில் டில்லியில் 17வயது மாணவி ஒருவர் சாலையில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானார். இதுதொடர்பாக கங்கனா பதிவிட்டுள்ளதாவது : ‛‛சாலையோர ரோமியோ ஒருவரால் டீனேஜ் பருவத்தில் என் சகோதரி ரங்கோலி ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். அதிலிருந்து அவர் மீண்டு வர 52 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டாள். எனது குடும்பமும் கடும் வேதனைக்கு உள்ளானது.
அந்த சம்பவத்திற்கு பின் என்னை யாராவது கடந்து சென்றால் என் மீதும் ஆசிட் வீசுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த பயத்தால் யாரேனும் முகம் தெரியாத நபர்கள் என்னை கடந்து சென்றால் முகத்தை மூடிக் கொள்வேன். இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதுமாதிரியான குற்றங்களை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு கங்கனா தெரிவித்துள்ளார்.