ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். சமீபத்தில் டில்லியில் 17வயது மாணவி ஒருவர் சாலையில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானார். இதுதொடர்பாக கங்கனா பதிவிட்டுள்ளதாவது : ‛‛சாலையோர ரோமியோ ஒருவரால் டீனேஜ் பருவத்தில் என் சகோதரி ரங்கோலி ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். அதிலிருந்து அவர் மீண்டு வர 52 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டாள். எனது குடும்பமும் கடும் வேதனைக்கு உள்ளானது.
அந்த சம்பவத்திற்கு பின் என்னை யாராவது கடந்து சென்றால் என் மீதும் ஆசிட் வீசுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த பயத்தால் யாரேனும் முகம் தெரியாத நபர்கள் என்னை கடந்து சென்றால் முகத்தை மூடிக் கொள்வேன். இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதுமாதிரியான குற்றங்களை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு கங்கனா தெரிவித்துள்ளார்.