பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இந்திர குமார் இயக்கத்தில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள படம் 'தேங்க் காட்'. வருகிற 25ம் தேதி வெளிவருகிறது. சமீபத்தில் சித்ரகுப்தன் சர்சையை ஏற்படுத்திய படம். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அடுத்து கட்டத்துக்கு செல்ல முயற்சிக்கும்போது விபத்தில் மரணமடைந்து விடுகிறார். விண்ணுலகம் செல்லும் அவருக்கு சித்ரகுப்தன் வாழ்க்கையை புரிய வைப்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இயக்குனர் இந்திரகுமார் இந்த கதையை என்னிடம் சொன்னபோது எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதே நேரத்தில் அந்த கதை வாழ்க்கையை புரிய வைத்தது.
எனக்கு போலீஸ் வேடம் என்றதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என் உயரம் போலீஸ் கேரக்டருக்கு சரியாக இருக்கும், ஆனால் உடற்கட்டு சரியாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கு மேல் யோசிக்காமல் இயக்குனரிடம் என்னை ஒப்படைத்து விட்டேன். அவர் என்னை திரையில் அற்புதமாக உருவாக்கினார். இப்போது இதுபோன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.