மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ரசிகர்கள் பொது இடங்களிலோ அல்லது ஏதாவது விழா நிகழ்ச்சிகளிலோ தங்களது அபிமான நடிகர்களை நேரில் காணும்போது, அவர்களோடு இணைந்து செல்பி எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பல நடிகர்கள், தங்களது ரசிகர்களின் இந்த செல்பி எடுக்கும் விஷயத்திற்கு பெரிய அளவில் ஆதரவு கொடுப்பது இல்லை. அதுவும் குறிப்பாக தங்களது சூழ்நிலை குறித்து கவனத்தில் கொள்ளாமல், மேலும் தங்களது அனுமதியை கூட பெறாமல், வலுக்கட்டாயமாக செல்பி எடுக்கும் ரசிகர்களிடம் கோபத்தை காட்டவும் செய்கின்றனர்.
இப்படி ஒரு நிகழ்வு சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் நடந்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்ல, தனது காரில் ஏறுவதற்காக வரும் ஹிருத்திக் ரோஷனை பார்த்ததும் வேகமாக வந்த ரசிகர் ஒருவர் தனது மொபைல்போன் மூலம் அவருடன் செல்பி எடுக்க முயற்சிக்கிறார். இதற்காக சில நொடிகள் தனது கைகளை வைத்து ஹிருத்திக் ரோஷனை தடுத்து நிறுத்துகிறார். தன் அனுமதி இல்லாமல் அத்துமீறி செல்பி எடுத்த இந்த ரசிகரின் செயலால் அப்செட்டானார் ஹிருத்திக் ரோஷன். உடனடியாக அங்கிருந்த பவுன்சர்கள் அந்த இளைஞரை பிடித்து அப்புறப்படுத்தினர். உடனே அவர்களுடன் அந்த இளைஞர் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைப் பார்த்தபடியே ஹிருத்திக் ரோஷன் தனது காரில் ஏறி கிளம்பினார் இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.