புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் படங்கள் சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் வரிசையாக தோல்வியை தழுவி வருகின்றன. இதனால் அப்செட்டாகி இருக்கும் அக்சய் குமார் தனது சம்பளத்தை கூட அடுத்தடுத்த படங்களுக்கு குறைத்துக் கொண்டார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் அடுத்ததாக தான் நடித்துள்ள ரக்சா பந்தன் படத்தின் ரிலீஸை ரொம்பவே எதிர்பார்க்கிறார் அக்சய் குமார். அதற்காக இப்போதே இந்தப்படத்தின் புரமோஷனில் இறங்கிவிட்டார். இந்தநிலையில் அதன் ஒரு பகுதியாக ரசிகர்களிடம் சோசியல் மீடியாவில் உரையாடிய அக்சய் குமாரிடம் ரசிகர் ஒருவர் மலையாளத்தில் நீங்கள் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்
அதற்கு பதிலளித்த அக்சய் குமார், “எனக்கும் மலையாளத்தில் நடிக்க விருப்பம் தான். ஆனால் எனக்கு மலையாளம் பேச வராது என்று கூறியுள்ளார். அதேசமயம் எனக்கு பதிலாக யாரும் டப்பிங் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை என்றும், நானே பேசுவது தான் எனக்கு பிடிக்கும் என்று அவர் பதில் அளித்துள்ளார்.
மேலும் தமிழில் ரஜினியுடன் இணைந்து நடித்துவிட்டேன்.. கன்னடத்திலும் நடித்துவிட்டேன். அதேபோல மலையாளத்தில், அதுவும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என கூறியுள்ள அக்சய் குமார் தனது விருப்பம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷினிடம் தெரியப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மலையாளத்தில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக இருக்கும் பிரியதர்ஷன், ஹிந்தியில் அதிகப்படியான படங்களை அக்சய் குமாரை வைத்து தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.