இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இவர் நடித்த பிசினஸ்மேன் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் மகேஷ்பாபு நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் மகேஷ்பாபு கூறியிருப்பதாவது: எனது படத்தின் ரீமேக்கில் மட்டுமில்லை, ஒரிஜினல் கதை கொண்ட ஹிந்தி படத்தில் கூட நடிக்க மாட்டேன்.
தெலுங்கு படங்களில் நடித்துதான் நான் புகழ்பெற்றேன். இப்போது தெலுங்கு உள்பட தென்னிந்திய படங்களுக்கு உலக அளவில் வியாபாரம் இருக்கிறது. ஹிந்தி சினிமாவிலும் தென்னிந்திய மொழி படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும்போது, நான் ஏன் வேறு மொழிகளில் நடிக்க வேண்டும்? அதுவும் ஹிந்தியில் நடிக்கும் எண்ணமே கிடையாது. தொடர்ந்து எனது ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன். என்கிறார்.
இதேபோல தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஜான் ஆபிரஹாம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஜான் ஆபிரஹாம் கூறியிருப்பதாவது: தெலுங்கு படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. பொதுவாக எனக்கு மாநில மொழி படங்களில் நடிக்கும் எண்ணமில்லை. குறிப்பாக தென்னிந்திய மொழி படங்களில் பணத்துக்காக பிராந்திய மொழி படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். காரணம் நான் ஹிந்தி நடிகன். என்று கூறியிருக்கிறார்.