இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலி இருவருக்கும் கடந்த வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தையின் தனிப்பட்ட உரிமை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அக்குழந்தையின் புகைப்படங்களை எந்த விதத்திலும் எடுத்து வெளியிட வேண்டாம் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியின் போது அனுஷ்கா அவரது குழந்தையான வாமிகாவை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகிவிட்டது. அப்புகைப்படம் உடனடியாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அதன்பின்பு அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி இருவரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதில், “நேற்று மைதானத்தில் எங்களது மகளின் புகைப்படம் படமாக்கப்பட்டு அது பெரிய அளவில் ஷேர் ஆகிவிட்டது குறித்து அறிந்தோம். கேமரா எங்களை நோக்கி இருக்கிறது என்ற கவனமில்லாத காரணத்தால் நாங்கள் படம் பிடிக்கப்பட்டோம். இந்த விவகாரத்தில் எங்கள் வேண்டுகோளும், நிலைப்பாடும் அதேதான். ஏற்கெனவே நாங்கள் சொன்னபடி வாமிகாவின் புகைப்படத்தை படமெடுக்கவோ, வெளியிடவோ செய்யாமல் இருந்தால் நாங்கள் உண்மையில் பாராட்டுவோம்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இருப்பினும் வாமிகாவின் புகைப்படம் பகிரப்பட்டு தற்போது டுவிட்டரில் #VamikaKohli என்று டிரென்டிங்கில் வேறு உள்ளது.