பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலி இருவருக்கும் கடந்த வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தையின் தனிப்பட்ட உரிமை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அக்குழந்தையின் புகைப்படங்களை எந்த விதத்திலும் எடுத்து வெளியிட வேண்டாம் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியின் போது அனுஷ்கா அவரது குழந்தையான வாமிகாவை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகிவிட்டது. அப்புகைப்படம் உடனடியாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அதன்பின்பு அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி இருவரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதில், “நேற்று மைதானத்தில் எங்களது மகளின் புகைப்படம் படமாக்கப்பட்டு அது பெரிய அளவில் ஷேர் ஆகிவிட்டது குறித்து அறிந்தோம். கேமரா எங்களை நோக்கி இருக்கிறது என்ற கவனமில்லாத காரணத்தால் நாங்கள் படம் பிடிக்கப்பட்டோம். இந்த விவகாரத்தில் எங்கள் வேண்டுகோளும், நிலைப்பாடும் அதேதான். ஏற்கெனவே நாங்கள் சொன்னபடி வாமிகாவின் புகைப்படத்தை படமெடுக்கவோ, வெளியிடவோ செய்யாமல் இருந்தால் நாங்கள் உண்மையில் பாராட்டுவோம்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இருப்பினும் வாமிகாவின் புகைப்படம் பகிரப்பட்டு தற்போது டுவிட்டரில் #VamikaKohli என்று டிரென்டிங்கில் வேறு உள்ளது.