ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
'பாகுபலி' படத்திற்குப் பிறகு சில தென்னிந்திய ஹீரோக்கள் பான்-இந்தியா ஸ்டார்களாக மாறி வருகிறார்கள். பிரபாஸுக்கு பாலிவுட்டிலும் தனி மார்க்கெட் உருவாகி விட்டது. சமீபத்தில் 'புஷ்பா' வெற்றி முலம் அல்லு அர்ஜுனும் தனது கணக்கைத் துவக்கியுள்ளார். அடுத்தடுத்து மேலும் சில தென்னிந்திய படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.
அடிக்கடி சர்ச்சை கருத்துக்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் பாலிவுட் நடிகையான கங்கனா ரணவத் தற்போது தென்னிந்திய ஹீரோக்களைப் பற்றி ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “தென்னிந்திய ஸ்டார்களும், தென்னிந்திய படங்களும் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறது என்பதற்கு சில காரணங்கள்…1.அவர்கள் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியவர்கள், 2. அவர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவுகளை நேசிக்கிறார்கள், மேற்கத்திய மயமாக இருக்கவில்லை, 3. அவர்கள் தொழில்முறையும் ஆர்வமும் இணையற்றது,” எனக் குறிப்பிட்டு, “பாலிவுட் அவர்களை கெடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது,” என பதிவிட்டுள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டிற்கு அடுத்தடுத்து சில நடிகர்கள் வந்து வெற்றி பெறுவதால் பாலிவுட் ஹீரோக்களை வெறுப்பேற்ற இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறாரோ கங்கனா ?.