ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறை சென்று விட்டு கடந்த அக்டோபர் 28ம் தேதி தான் ஜாமினில் வெளியே வந்தார். அவரது ஜாமினுக்காக ரூ.1 லட்சம் கட்டி கையெழுத்திட்டு அவரை வெளியே கொண்டு வந்தவர் ஷாருக்கானின் நெருங்கிய தோழியான நடிகை ஜூகி சாவ்லா.
இந்த நிலையில் நேற்றைய தினம் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஆர்யன்கான். இதனையொட்டி அவரது பெயரில் 500 மரக்கன்றுகளை நட்டதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜூகி சாவ்லா. அதோடு ‛பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரியன். உன்னுடைய ஆசைகள் வரும் ஆண்டுகளில் நிறைவேறட்டும். என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் பாதுகாக்கப்பட்டவராகவும், சர்வ வல்லமை உள்ளவராகவும் இருக்க வேண்டும்,' என்றும் வாழ்த்தி இருக்கிறார்.