நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
செய்தி வாசிப்பாளராக இருந்து, டிவி தொடரில் கதாநாயகியாக நுழைந்து, அங்கிருந்து சினிமாவுக்கு வந்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். அவருக்கும் அவருடன் படித்த ராஜவேல் என்பவருக்கும் ஏற்கெனவே காதல் என்பது தெரிந்த ஒன்றுதான். எப்போதாவது காதலருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிடுவார் பிரியா. இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தன் காதலைப் பற்றிய அன்பான பதிவுடன் வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார்.
“ஆக, இவர்தான் அவர்… எனது சிறந்த நண்பர், நாங்கள் சிரிப்போம், சண்டை போடுவோம், அழுவோம். தவறான வரிகளை நம்பிக்கையுடன் அவர் சத்தமாகப் பாடுவார். எங்களுக்குள் ஏ முதல் இசட் வரை வேறுபாடு உண்டு, ஆனாலும் அவர் என்னை நிறைவு செய்வார். நாங்கள் பொருத்தமற்றவர்கள் என்றாலும் எனக்குள் எப்போதும் அன்பாகவும், கலகலப்பாகவும், எளிமையாகவும் இருப்பார். அவருடன் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும், அதே சமயம் அமைதியாக அமர்ந்து, அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து எனது வலிகளைப் பற்றிப் பேசுவேன். இந்த வாழ்க்கையை கோடி மடங்கு ஆனந்தமாகக் கடக்க இவர் மட்டும் போதும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.