பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். அவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த மாதம் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்து சிறையை விட்டு வெளியே வந்தார்.
அதேசமயம் வார இறுதியில் அவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டும் என்பது ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்று.. அந்தவகையில் சமீபத்தில் அவருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தனக்கு காய்ச்சல் என்றும் உடல்நிலை சரியில்லை என்றும் கூறி அந்த சம்மனை நிராகரித்து விட்டாராம் ஆர்யன் கான். அதேசமயம் அவருடன் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அவரது நண்பன் அர்பாஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.