32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். அவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த மாதம் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்து சிறையை விட்டு வெளியே வந்தார்.
அதேசமயம் வார இறுதியில் அவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டும் என்பது ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்று.. அந்தவகையில் சமீபத்தில் அவருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தனக்கு காய்ச்சல் என்றும் உடல்நிலை சரியில்லை என்றும் கூறி அந்த சம்மனை நிராகரித்து விட்டாராம் ஆர்யன் கான். அதேசமயம் அவருடன் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அவரது நண்பன் அர்பாஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.