மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மும்பை : போதை வழக்கில் 25 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் ஜாமினில் இன்று(அக்., 30) வெளியே வந்தார்.
சொகுசு கப்பலில், போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டனர். 25 நாட்களுக்கும் மேலாக சிறை வாசத்தில் இருந்த ஆர்யன் கானுக்கு நேற்று முன்தினம் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமின் நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.
உத்தரவாதமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமின் பெற உத்தரவிட்டது. நேற்றே அவர் ஜாமினில் வெளிவருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் உரிய நேரத்திற்குள் ஜாமின் உத்தரவு சிறை நிர்வாகத்திற்கு வந்து சேராததால் ஆர்யன் கான் நேற்று விடுவிக்கப்படவில்லை. நேற்று இரவும் அவர் சிறையில் கழிக்கவேண்டி இருந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலையானார். ஆர்தர் ரோடு சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்யன் காரில் ஏறி நேராக அவரது மன்னத் வீட்டிற்கு சென்றார். நேற்றே ஆர்யன் கான் விடுதலையாவார் என எண்ணி ரசிகர்கள் தொடர்ந்து நேற்று முதல் ஷாரூக்கானின் இல்லத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.