பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
மும்பை : போதை வழக்கில் 25 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் ஜாமினில் இன்று(அக்., 30) வெளியே வந்தார்.
சொகுசு கப்பலில், போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டனர். 25 நாட்களுக்கும் மேலாக சிறை வாசத்தில் இருந்த ஆர்யன் கானுக்கு நேற்று முன்தினம் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமின் நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.
உத்தரவாதமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமின் பெற உத்தரவிட்டது. நேற்றே அவர் ஜாமினில் வெளிவருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் உரிய நேரத்திற்குள் ஜாமின் உத்தரவு சிறை நிர்வாகத்திற்கு வந்து சேராததால் ஆர்யன் கான் நேற்று விடுவிக்கப்படவில்லை. நேற்று இரவும் அவர் சிறையில் கழிக்கவேண்டி இருந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலையானார். ஆர்தர் ரோடு சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்யன் காரில் ஏறி நேராக அவரது மன்னத் வீட்டிற்கு சென்றார். நேற்றே ஆர்யன் கான் விடுதலையாவார் என எண்ணி ரசிகர்கள் தொடர்ந்து நேற்று முதல் ஷாரூக்கானின் இல்லத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.