வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஷாரூக்கான். அந்த வகையில் ஆரியன்கானின் ஜாமீன் மனு அக்டோபர் 8-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டு, பின்னர் அக்டோபர் 11ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் ஜாமீன் மனுவை நிராகரிக்க கூறப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 20ம் தேதியான இன்று ஆரியன் கானின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆரியன்கான் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து ஜாமீன் மனுவை நிராகரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இப்படி பலமுறை ஆரியன்கானை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தும் தொடர்ந்து ஜாமீன் கிடைக்காததால் ஷாரூக்கான் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.