படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஷாரூக்கான். அந்த வகையில் ஆரியன்கானின் ஜாமீன் மனு அக்டோபர் 8-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டு, பின்னர் அக்டோபர் 11ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் ஜாமீன் மனுவை நிராகரிக்க கூறப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 20ம் தேதியான இன்று ஆரியன் கானின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆரியன்கான் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து ஜாமீன் மனுவை நிராகரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இப்படி பலமுறை ஆரியன்கானை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தும் தொடர்ந்து ஜாமீன் கிடைக்காததால் ஷாரூக்கான் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.