கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
பிரபல பாலிவுட் நடிகை யுவிகா சவுத்ரி. ஓம் சாந்தி ஓம், எனிமி, தி பவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார், பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு யுவிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அரியானாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யும் வகையிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் ரஜத் கல்சன் என்பவர் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். யுவிகா சவுத்ரி தனது டுவிட்டர் பதிவில், நான் பேசிய வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், அந்த வார்த்தைகள் திரித்து பரப்பப்பட்டுள்ளது யாருடைய மனதையும் நான் காயப்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். உங்கள் அனைவர் மீதும் எனக்கு நிறைய அன்பு உள்ளது. என்று தெரிவித்தார்.
என்றாலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹன்சி போலீசார் நேற்று யுவிகா சவுத்ரியை திடீரென கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மாலையில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்ந்து நடக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.