காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு |
கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் இனம் புரியாத அமைதி நிலவுகிறது. சிலரிடம் பயம் கலந்த பேச்சு இருக்கிறது. இன்னும் சிலர் துாக்கம் இல்லாமல் தவிக்கிறார்களாம். காரணம், போதை விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மாட்டி சிறை சென்றதுதான். அடுத்து அந்த நடிகர் சிக்கப்போகிறார், அந்த நடிகையிடம் விசாரணை நடக்கப்போகிறது, அந்த பார்ட்டிக்கு சென்றவர்களை போலீஸ் கண்காணிக்கிறது என தினமும் செய்திகள் கசிய, அதை படித்துவிட்டு பார்ட்டிக்கு செல்பவர்கள், இரவு பறவைகள் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.
நாம் அகப்படுவோமோ? நம் பெயர் வெளியே வருமா? நம்மை விசாரணைக்கு அழைப்பார்களா? அப்படியானால் நம் எதிர்காலம் என்று தவிக்கிறார்களாம். ஆனால் இன்னொரு தரப்போ அவ்வளவு துாரம் போகாது. சிலருடன் விசாரணை நின்றுவிடும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்று ஓரளவு தைரியத்தில் இருக்கிறார்களாம். தமிழ் சினிமாவில் போதை பொருள் பயன்பாடு இருக்கிறது. இந்த சூழ்நிலையிலாவது அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்டஸ்ரி கெட்டுவிடும் என்பது பலரின் கருத்தாகவும் இருக்கிறது.