நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். தமிழ் மக்களிடையே பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 மிக பிரம்மாண்டமான முறையில் நேற்று தொடங்கியது. இந்த முறை சினிமா பிரபலங்கள் உட்பட மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள நிலையில், முதல் முறையாக திருநங்கை ஒருவரை போட்டியாளராக களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு. திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் உலக அளவிலும் இந்திய அளவிலும் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றவர் நமிதா மாரிமுத்து. நாடோடிகள் 2 படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளர்கள் கலந்து கொண்ட எபிசோடுகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தன. அந்த வகையில் தமிழிலும் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்து கொள்வது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.