சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கிய ஜாக்குலின் மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்தார். 'கனா காணும் காலங்கள்', 'ஆண்டாள் அழகர்' ஆகிய தொடர்களில் ஏற்கனவே நடித்திருந்த ஜாக்குலின் 'தேன்மொழி பி.ஏ' என்ற தொடரில் நாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது சீரியலை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே இந்த சீரியலுக்கான சரியான ஸ்லாட் கிடைக்காததால் வெவ்வேறு நேரங்களில் மாற்றி மாற்றி ஒளிபரப்பட்டது. மேலும், கொரோனாவின் போது ஷுட்டிங் நடைபெறாததால் சீரியல் ஒளிபரப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு சமீபத்தில் தான் மீண்டும் தொடங்கியுள்ளது. இது போன்ற சில சிக்கல்களின் காரணமாக சீரியலை முடித்துவிடலாம் என தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப கதைக்களம் மாற்றியமைக்கப்பட்டு 'தேன்மொழி பி.ஏ'முடிவை நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை ஜாக்குலினே தெரிவித்துள்ளார்.