வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கும் ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக நடிகர் வெங்கட் தெரிவித்துள்ளார். ரோஜா தொடரில் நாயகன் அர்ஜூனுக்கு தம்பியாக அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வந்தார். இந்த தொடரில் பூஜா - அஸ்வின் - அனு என்ற முக்கோண காதல் கதை எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போது அஸ்வின் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
அஸ்வின் - பூஜா திருமணத்துக்கு பின் பூஜா வீட்டிற்கு சென்றுவிடும் அஸ்வின் கதாபாத்திரம் தனது முக்கியத்துவத்தை இழந்து வீக்காக மாறியுள்ளது. இதற்கிடையில் பல எபிசோடுகளாக அஸ்வினை ரோஜா சீரியலில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வெங்கட், ரோஜா சீரியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'அஸ்வினாக நடித்த எனக்கு அதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இனி நீங்கள் என்னை ஜீவாவாக(பாண்டியன் ஸ்டோர்ஸ்) பார்க்கலாம்' என குறிப்பிட்டிருந்தார்.
வெங்கட் தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.




