துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கும் ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக நடிகர் வெங்கட் தெரிவித்துள்ளார். ரோஜா தொடரில் நாயகன் அர்ஜூனுக்கு தம்பியாக அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வந்தார். இந்த தொடரில் பூஜா - அஸ்வின் - அனு என்ற முக்கோண காதல் கதை எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போது அஸ்வின் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
அஸ்வின் - பூஜா திருமணத்துக்கு பின் பூஜா வீட்டிற்கு சென்றுவிடும் அஸ்வின் கதாபாத்திரம் தனது முக்கியத்துவத்தை இழந்து வீக்காக மாறியுள்ளது. இதற்கிடையில் பல எபிசோடுகளாக அஸ்வினை ரோஜா சீரியலில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வெங்கட், ரோஜா சீரியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'அஸ்வினாக நடித்த எனக்கு அதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இனி நீங்கள் என்னை ஜீவாவாக(பாண்டியன் ஸ்டோர்ஸ்) பார்க்கலாம்' என குறிப்பிட்டிருந்தார்.
வெங்கட் தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.