சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
தொலைக்காட்சிகளுக்கு இடையே நடக்கும் டிஆர்பி போட்டியில் புதுப்புது சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் ஒளிபரப்பும் நிகழ்ச்சி தான் சர்வைவர். ஆக்ஷன் கிங் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதில் ஒருவராக விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டுள்ளார்.
இளைஞர்களின் புது கிரஷாக மாறியுள்ள ஐஸ்வர்யா தனக்கு சர்வைவர் வாய்ப்பு கிடைத்தது குறித்து ஒரு பேட்டியில் முன்னதாக தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் அவர், 'பிட்னஸ் டிரெய்னர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. இன்ஸ்டாவில் சில ஸ்டண்ட் வீடியோக்களை அப்லோட் செய்திருந்தேன். என்னுடைய அந்த ஸ்டண்ட் வீடியோக்களை பார்த்த ஜீ தமிழ் நிர்வாகம் என்னை அழைத்து சர்வைவர் ஷோவில் கலந்து கொள்ள சொன்னார்கள். அதன் பின் நேரடியாக இண்டர்வியூ நடந்தது. இப்படி தான் எனக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என கூறியுள்ளார்.