பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்து இரண்டு எபிசோடுகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார் விஜே பார்வதி. ஜி தமிழ் டிவியின் பிரம்மாண்டமான தயாரிப்பில் சர்வைவர் ரியாலிட்டி ஷோ கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்து இதுவரை இரண்டு எபிசோடுகளை கடந்துள்ளது.
இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான விஜே பார்வதியின் செயல்கள் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் மரம் வெட்ட சென்ற இடத்தில் அம்ஜத்துடன் சண்டையிட்டடார். ஸ்ருஷ்டி டாங்கேவை பார்த்து கேமரா வரும்போது மட்டும் நீங்க வேலை செய்றீங்களா? என்று வம்பிழுத்தார். ஒரு சமயத்தில் பார்வதி கீழே விழ நான் கீழே விழும்போது சிரிப்பீங்களா என்று மீண்டும் ஸ்ருஷ்டி டாங்கேவிடம் பஞ்சாயத்தை கூட்டினார். தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கிலும் தைரியசாலியாக மட்டும் இருந்தால் போதாது தலைவராக இருக்க ஒரு அணியை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என திடீர் தீடீரென ட்விஸ்ட் அடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் விஜே பார்வதியை விமர்சித்து வருகின்றனர். மேலும் சர்வைவர் டீமில் பார்வதி தான் அடுத்த வனிதா என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.