புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீரென தீபிகா சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு விலகியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த பேட்டியில், எனக்கு மேக்கப் போடுவதால் அலர்ஜி ஏற்பட்டு முகத்தில் பருக்கள் அதிகமானது. இந்த பிரச்னை கடந்த 3 மாதங்களாகவே இருந்து வருகிறது. நானும் இதற்காக ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தேன். ஆனால் சரியாகவில்லை. தொலைக்காட்சி நிறுவனமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் எனக்கு மிகவும் சப்போர்டிவாக இருந்தனர். ஆனாலும், அவர்கள் கொடுத்த நேரத்திற்குள் எனக்கு ட்ரீட்மெண்ட் முடியாததால் நான் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என கூறினார்.
தற்போது தீபிகா நடித்து வந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் டிவி நடிகையான சாய் காயத்ரி நடித்து வருகிறார்.