ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாக்கியலெட்சுமி சீரியல் வெற்றிகரமாக 300-வது எபிசோடை கடந்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலெட்சுமி சீரியல் உள்ளது. தற்போது இந்த சீரியல் 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளதை முன்னிட்டு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன் புரோமோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அந்த புரோமோவில் நாம் காண்பது பாக்கியலெட்சுமி சீரியலை பார்த்து இன்ஸ்பையர் ஆன கூட்டுக்குடும்பத்தின் நபர்கள் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதில் பேசும் ஒரு வயதான தயார் பாக்கியலெட்சுமி சீரியலில் பாக்கியாவின் கதாபாத்திரத்தை பார்த்து இண்ஸ்பையர் ஆகி தான், அவர் ஆட்டோ ஒட்டுவதாகவும், உணவு சேவை வழங்கி வருவதாகவும் கூறினார். இந்த நெகிழ்ச்சியான பேச்சுடன் ஆரம்பமாகும் புரோமோ மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பாக்கியலெட்சுமி 300 சிறப்பு நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்று மதியம் 2 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.