துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜோடியாக நடித்து வரும் சரவண விக்ரம் - ஐஸ்வர்யா நிஜத்திலும் காதலர்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது அந்த கேள்விக்கு இருவரும் ஜோடியாக சேர்ந்தே விளக்கமளித்துள்ளனர்.
இப்போதெல்லாம் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் நிஜ வாழ்விலும் கல்யாணம் செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர் தொடரில் கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரமும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகாவும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக 'நீங்கள் நிஜத்திலும் காதல் ஜோடியாக ஆகிவிட்டீர்களா'? என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சரவண விக்ரம், தீபிகா இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் லைவ்வில் 'நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான். இந்த கேள்வியை தான் எல்லோரும் கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்லி சொல்லி எங்களுக்கே கஷ்டமாக இருக்கிறது'என கூறினர்.