ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் |
சினிமா போன்று சின்னத்திரைக்கும் பல சங்கங்கள் உள்ளன. இதன் கூட்டமைப்பாக பெப்சி சங்கத்தை போன்று தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு இருக்கிறது. இதன் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
சங்க வளாகத்தில் நடந்த எளிய விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.ரவிவர்மா முன்னிலை வகித்தார். இவர்கள் உள்பட துணை தலைவர் சி.ரங்கநாதன், பொருளாளார் வி.ராஜா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
விழாவில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக இயக்குனர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.